எஸ்பி. சரவணன் கவிதைகள்



SP.Saravanan Kavithaigal



எஸ்பி. சரவணன் கவிதைகள்


SP.Saravanan Kavithaigal

இருபது ஆண்டுகள்
கடந்துவிட்ட பின்னரும்
இன்னும் இளமையாகவே
இருக்கிறது
நீ எழுதிய
காதல் கடிதம்!

💕

மறந்துபோன திருமணத்திற்கு
பத்திரிக்கை கொடுத்தவர்
எதிரில் வந்தால்
சமாளிக்கும் வித்தையை
யாரிடம் கற்றுக்கொள்வது!

💕

உன்
பாசத்தை நேசிக்க
பலபேர் இருக்கலாம்
உன்னை
உயிராய் சுவாசிக்க
என்னைத் தவிர
யார் இருக்க முடியும்!

💕


நீயும் நானும்
பேசும் நேரங்களில் மட்டும்
இந்த கடிகார முட்கள்
உசேன் போல்டைவிட
வேகமாய் ஓடுகிறதே
ஏன்?

💕

யாரோ போல
என்னை
கடந்து செல்லும் திறமையை
எங்கு கற்றுக் கொண்டாய்
நீ?

💕

சட்டென்று சண்டைபோட
என்னருகில்
நீ வேண்டும்!

💕

நீ இல்லாத
நேரங்களில்
என்னருகிலேயே இருக்கிறது
உன் நினைவுகள்!

💕

உன் நினைவுகளைச்
சுமந்துவரும்
ஒவ்வொரு நொடிகளுமே
சொர்க்கம்!

💕

கரடுமுரடான பாதைகளைக் கூட
எளிதாய் கடந்திடுவேன்
உன்
பஞ்சு விரல் பற்றி நடந்திடும் போது!

💕

எந்தக் கட்டளையும்
இல்லாமல்
என்னைக் கட்டுப்படுத்திவிடுகிறது
உன் கண்கள்!

💕

உன்
கண்களைவிட
மிகச் சிறந்த கவிதை
இன்னும்
எழுதப்படவில்லை!

💕

பேசாத போதும்
பேசிக்கொண்டேயிருக்கின்றன
நீ
பேசிப்போன வார்த்தைகள்!

💕

உன்னோடு வாழ்ந்து
உன்னுடனேயே இறந்துபோகும்
வரம் வேண்டும்
எனக்கு!

💕

விழிக்கும் நேரத்திலிருந்து
உறங்கும் நேரம்வரை
கூடவே வருகின்றது
உன் நினைவுகள்!

💕

நிலம் அதிர
புகைவண்டி கடப்பதுபோல்
என்
மனம் அதிர
என்னைக் கடந்து விடுகிறாய்
நீ!

💕

விபத்தில் சிக்கிய ஜோடியை 
மனிதாபிமானத்தோடு அணுகி
நகைகளை கழட்டிச்சென்றார் ஒருவர்!
கைப்பையை எடுத்துசென்றார் ஒருவர்!
வீடியோவாய் எடுத்துச்சென்றனர் பலர்!

💕

எல்லாப்பூக்களும் அழகானவையே
அழகில்லாப் பூக்கள்
இவ்வுலகில் உண்டா என்ன?
அழகில்லா மனிதனும்
இவ்வுலகில் இல்லை
சிலர் உடலாலும்
சிலர் மனதாலும்
அழகாகவே இருக்கின்றனர்
பூக்களைபோலவே!

💕

வாழ்வில் ஒரு மரத்தையாவது
நட்டுவிடுங்கள்
நாம் வாழ்ந்து மறைந்தபின்னும்
அவை வாழ்ந்து 
உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கும்
ஆக்சிஜன் இல்லாமல்
அவதியுறும் நிலையை
அனுபவிக்கக் கூடாது எனில்
வாழ்வில் ஒரு மரத்தையாவது
நட்டுவிடுங்கள்

💕

மழை பிடிக்காத மனிதன் இல்லை
ஏழை, பணக்காரன்
நல்லவன், கெட்டவன்
என்கிற பேதமே இல்லாமல்
ஒரே மாதிரியாக
சிலநேரம் மிதமாய்
சிலநேரம் இதமாய்
சிலநேரம் ஆக்ரோஷமாய்
கொட்டிக்கொடுத்துச் செல்கிறது மழை!

💕

பூக்களும் முட்களுமாய்
மனதை வருடிச் செல்கிறது
உன்னைப் பற்றிய 
நினைவுகள்!

💕

பன்றி வளர்த்து மாதம் 
பத்து லட்சம் சம்பாதிப்பதாக 
பசுமை விகடன் 
பணப்போதை ஏற்றுவது போல்
எனக்குள் மனப்போதை ஏற்றுகிறது 
உன் பேரழகு!
Oldest