உங்கள் வீட்டு
பூஜையறையை தெய்வ கடாட்சத்தோடு வைத்துக்கொள்ள கீழ்க்கண்ட குறிப்புகளை கட்டாயமாக
செய்யுங்கள் :-
🔯 முதலில் தனது வீட்டில்
கோலம் போட்டு விளக்கேற்றி வழிபட்ட பின்னரே கோவில்களுக்கு செல்ல வேண்டும்.
🔯 சுவாமி படங்களுக்கு புஷ்பம்
சார்த்தும் பொழுது சுவாமிகளின் முகத்தையோ பாதத்தையோ மறைக்கும்படி சார்த்தகூடாது.
நாம் சுவாமி கும்பிடும்போது பாதத்தையும் முகத்தையும் பார்த்து வணங்கி வழிபட
வேண்டும்.
🔯 சிவபெருமான், பார்வதி நாச்சியாருடன் கணபதி, முருகன் இணைந்து உள்ள படம்
கிடைத்தால் கிழக்குப் பக்கம் பார்க்கும்படி மாட்டி வையுங்கள். வீடுகளில்
ஏற்பட்டுள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்கிவிடும்.
🔯 சுவாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களை
சூடாதீர்கள்.
🔯 சுவாமி படங்களை கிழக்கு
நோக்கி வைத்து வழிபட வேண்டும். கிழக்குப் பகுதியில் வைக்க முடியாவிட்டால் தெற்கு
பகுதியை தவிர மற்ற பகுதியில் வைத்து வழிபடலாம். நாம் தெற்குப் பக்கம் நின்றுகொண்டு
வடக்குப் பார்த்தவாறு வணங்கலாம்.
🔯 கற்பூர தீபம் காட்டிவிட்டு தானே மலையேறும் வரை
பொறுமை காக்க வேண்டும். கைகளால் அணைக்கவோ. ஊதி அணைக்கவோ கூடாது.
🔯 பித்தளை. வெள்ளி விளக்குகளை
மட்டுமே பயன்படுத்துங்கள். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளை
பயன்படுத்தாதீர்கள்.
🔯ஏற்றி வைத்திருக்கும் விளக்கிலிருந்து சூடத்தையோ
ஊதுபத்தியையோ பற்ற வைக்கக்கூடாது.
🔯 இறைவனின் படங்களை தவிர பூஜை
அறைக்குள் உங்கள் மூதாதையரின் புகைப்படங்கள் மாட்டி வழிபாடு செய்வதை
தவிர்த்திடுங்கள். மூதாதையர் புகைப்படங்களை
தனியாக வேறு அறைகளில் மாட்டி வழிபடுங்கள். இதுவே சிறந்த பலனை தரும்.
🔯 வீட்டில் யாராவது
உறங்கிக்கொண்டிருந்தால் பூஜை அறையில் விளக்கேற்றாதீர்கள். எழுந்தபின்பு
விளக்கேற்றி வழிபடுங்கள்.
🔯 முறையாக குருவிடம் தீட்சை
பெற்றவர்கள் மட்டுமே விபூதியை தண்ணீரில் குழைத்து பூசவேண்டும்.மற்றவர்கள் அவ்வாறு
செய்யக்கூடாது.
🔯 தேங்காய் இரண்டாக உடையாமல்
சிதறுகலாய் உடைந்து போனால் வேறு தேங்காய் உடைக்க வேண்டும். அதையே வைத்து
நைவேத்தியம் செய்யக் கூடாது.
🔯 சுவாமி படங்களில் மின்சார
வயர்களைக் கொண்டு அலங்காரம் செய்தல் கூடாது.
🔯 துளசியால் நைவேத்தியம்
செய்தால் விஷ்ணுவின் வாசம் எப்போதும் உண்டு.
🔯 நைவேத்தியம் செய்யும்
பொழுது வெற்றிலை பாக்குகளை இரட்டைப் படையாக அமையும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
🔯 நைவேத்தியம் செய்யும்
பொழுது பழங்கள், பூக்கள் போன்றவற்றை தரையில்
படும்படி வைக்கக்கூடாது. தம்பாளத்தில் வைத்தே வழிபட வேண்டும்.
🔯 வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தால் அவர்களையும் உங்கள் பூஜையில் பங்கேற்க
வையுங்கள். அவர்களை வழியனுப்பி விட்டு செய்யும் பூஜை முழு பலன்களை தராது.
🔯 பெண்கள் நெற்றியில்
குங்குமம் அணிந்து பூஜை செய்தல் வேண்டும். ஸ்டிக்கர் போட்டு வைத்து பூஜை
செய்யகூடாது.
🔯 சுமங்கலிப் பெண்களுக்கு
மங்கலத்தை அளிக்கும் அம்பாள் குடியிருக்கும் இடம் பெண்களின் குங்கும பொட்டிட்ட நடு
வகிடுதான். நடு வகிட்டில் குங்கும பொட்டிட்ட பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி
பாக்கியம் உண்டு.
🔯 ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையன்றும் குத்துவிளக்கில் சந்தனப் பொட்டு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து குங்குமத்தாலோ
மலர்களாலோ மஞ்சள் அட்சதை கொண்டோ பூஜை செய்தால் மஹாலட்சுமி நிரந்தமாய்
குடியிருப்பார்.
🔯மாலையில் விளக்கு ஏற்றும் பொழுதிற்கு முன்பாகவே
தானம் செய்துவிடுங்கள். விளக்கேற்றிய பிறகு தான தர்மம் செய்தலாகாது.
🔯 சுவாமி படங்களில்
மாட்டியிருந்த பழைய மாலைகள் மற்றும் பூக்களை ஓடுகின்ற நீரில் விட்டு விட வேண்டும்.
🔯 இறைவனின் படங்களை வடக்கு
முகமாக மாட்டி வைப்பதை கட்டாயம் தவிர்க்கவேண்டும். தோஷத்தை உண்டாக்கிவிடும்.
🔯 ஈரமான உடையணிந்தோ, ஒரே ஒரு ஆடை அணிந்தோ, தலையில் துணியை
கட்டிக்கொண்டோ பூஜை செய்யக்கூடாது.
🔯 வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் எல்லா அறைகளிலும் சிறிய அகல் விளக்குகளை ஏற்றி
வையுங்கள். விளக்குகளின் ஒளியில் உங்கள் கஷ்டங்கள் அகலும்.
🔯 விளக்கேற்றும் பொழுது
உங்கள் இல்லத்தின் பின்பக்க கதவை சாத்திவிடுங்கள்.
🔯 பெண்கள் வீட்டிலிருக்கும்
பொழுது ஆண்கள் விளக்கை மலைஏற்றக் கூடாது.
🔯 வாழைப் பழத்தில் ஊதுபத்தியை
சொருகி வைத்தல் கூடாது.
🔯 பூஜை அறையின் கதவில் ஓம் மற்றும் ஸ்ரீசக்கரம், ஸ்வஸ்திக், திரிசூலம் சின்னங்களை ஒட்டி வைத்தல் அதிர்ஷ்டம் அளிக்கும்.
ConversionConversion EmoticonEmoticon